ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 12, 2018

Comments:0

ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு



ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, திருத்தணி கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்து உள்ளது.

இது குறித்து, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலைய துறை ஆணைப்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கோவில்களில் திருமுறைகளைக் குறைவின்றி ஓதிட ஏதுவாக, ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், மூன்றாண்டுகள் திருமுறை இசைமணி சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள ஹிந்து மாணவர்கள், 15ம் தேதி, மாலை, 5:45 மணிக்குள், திருத்தணி கோவில் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கான கல்வித் தகுதி, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், 13 வயது முதல், 20க்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இது தவிர, ஊக்கத் தொகை மாதம் ஒன்றுக்கு, 1,000 ரூபாயும், பயிற்சி முடிந்தவுடன் ஓதுவார் தகுதி சான்றும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு இணை ஆணையர் மற்றும் மேலாளரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews