மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு, ஆன்-லைனில் இதுவரை 8,817 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்காக, 16ம் தேதி வரை கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 68 உயர் கல்வி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த படிப்புகள் அனைத்திற்கும், இந்தாண்டு கணினி முறையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதற்காக, சென்டாக் வெப்சைட்டில் (www.centacpuducherry.in) ஒருங்கிணைந்த விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து படிப்புகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 4503 பேர், பிற மாநிலங்களில் இருந்து, 4272 பேர், என்.ஆர்.ஐ.,
இடங்களுக்கு 42 பேர் என, ஒட்டுமொத்தமாக 8,817 மாணவ, மாணவியர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.,இந்தாண்டு 'நீட்'
தேர்வில் அதிகமானோர் தேர்ச்சிபெற்று விண்ணப்பித்துள்ளதால் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இதுவரை 1143 பேர், பிற மாநிலங்களில் இருந்து 2969 பேர், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 33 பேர் என, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இதுவரை 4145 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பல் மருத்துவம்
பி.டி.எஸ்., படிப்பிற்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 918 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 1104 பேரும், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 9 பேர் என 2031 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.டெக்.,
பொறியியல் படிப்பினை பொறுத்தவரை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 2442 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து 199 பேர் என மொத்தம் 2641 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பி.பார்ம் - 2043,
ஆயுர்வேதம் -694,
கால்நடை மருத்துவம் -1964,
பி.பி.டி.., -1542 ,
பி.எஸ்சி.,
நர்சிங்-1903,
பி.எஸ்சி., எம்.எல்.டி., -1544,
பி.எஸ்சி., அக்ரி -2321,
பி.ஏ., எல்.எல்.பி. -668 என, இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
காலக்கெடு நீட்டிப்பு
கலை - அறிவியல் படிப்பிற்கும் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரையிலும், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 7ம் தேதி துவங்கி நேற்று வரையும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இருப்பினும், கிராமப்புற மாணவர்கள் பலர் இன்னும் விண்ணப்பிக்காமல் உள்ளனர். அவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கும் வகையில், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும் 16ம் தேதி வரை நீட்டித்து சென்டாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லேட்டரல் என்ட்ரி முறையில் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமோ கோர்ஸ்களில் சேருவதற்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.