புதுச்சேரியில், வெளிமாநிலத்தவருக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டு நோட்டீசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 22, 2018

Comments:0

புதுச்சேரியில், வெளிமாநிலத்தவருக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டு நோட்டீசு


சென்னை ஐகோர்ட்டில், சரண்தேவ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் எஸ்.சி., ஒதுக்கீட்டில் புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.சி. பிரிவினருக்கு மட்டும் இடம் தரவேண்டும். ஆனால், ஜிப்மரில் தற்போது எஸ்.சி., பிரிவில் தரப்பட்டுள்ள ஒதுக்கீட்டில் 6 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது ஆகும்‘ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்தார். பின்னர், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews