அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள்& தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 13, 2018

Comments:0

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள்& தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் செங்கோட்டையன்


அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:

இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.

எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங் கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயற்சி

''பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த மே 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவருகிறது; இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என தி.மு.க எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஆங்கில மோகத்தால் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுவருகிறது. ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்கி தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயன்றுவருகிறது. மேலும், மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது'' என்று விளக்கம் அளித்தார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews