ஆசிரியர் தகுதி தேர்வு எழுத சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 17, 2018

Comments:0

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.




ஆசிரியர் படிப்பு முடித்த கண்பார்வை இல்லாதோருக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. 

2018ம் ஆண்டு நடத்தபடும் தேர்வுகள் குறித்த அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. Kaninikkalvi.blogspot.in அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஆசிரியர் படிப்பு முடித்த கண்பார்வை இல்லாதோருக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வரும் 25ம் தேதிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்த சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வாய்ப்பை கண்பார்வையற்றோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாடவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews