போராடும் ஆசிரியர்களை தூக்கி வீச கபடி வீரர்களை களமிறக்கி அராஜகம்!!!
Anarchy by bringing in kabaddi players to throw out the protesting teachers!!!
திருச்சி மாவட்ட ஆசிரியரை ஏற்றும் போது, ஒரு காவலர் "காவல்துறை கபடி வீரர்களை களமிறக்கி இருப்பதாகவும், அமைதியாக ஏறிவிடுங்க சார்" என்றும் கூறியுள்ளார்.
இன்று நடந்த சம்பவம் இது.
மீண்டும் படிக்கவும்.
நானும் கேட்டேன்.
Uniform இல்லாமல் வந்து உள்ளீர்கள்.
நீங்கள் யார்? எந்த ஸ்டேஷன் என்று?
Civil என்று சொல்கிறார்.
அப்படி ஒன்று உள்ளதா?
Uniform இல்லாமல் ஆசிரியர்களை
தூக்கி எறிய அவர்களுக்கு
அனுமதி உள்ளதா?
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
சென்னையில் 7 நாளாக
நடக்கின்ற எல்லாவற்றையும்
பொதுமக்கள் பார்த்துகொண்டுதான் உள்ளார்கள் முதல்வரே.
குண்டர்களை வைத்து ஆசிரியர்களை அடிப்பதுதான் சமூக நீதியா????
எங்களை அடித்தாலும் பரவாயில்லை .
இனி சமூக நீதி என்ற வார்த்தையை தயவு செய்து உங்கள் வாயால் கூறாதீர்கள்.
நன்றி .
இப்படிக்கு உங்களுக்கு
ஒரு பைசா காசு வாங்காமல்
ஓட்டுப் போட்ட ஒரு கடைநிலை ஆசிரியன்.
இல்லை இல்லை..
2009 இல் உங்களால்
இந்தியாவிலேயே
கடைநிலை ஆக்கப்பட்ட
ஆசிரியன்.
#சமவேலைக்கு_சம_ஊதியம்
#திமுகதேர்தல்வாக்குறுதி311
Search This Blog
Friday, January 02, 2026
Comments:0
போராடும் ஆசிரியர்களை தூக்கி வீச கபடி வீரர்களை களமிறக்கி அராஜகம்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.