ஆய்வக உதவியாளர்களுக்கு EMIS பணியிலிருந்து விலக்கு - பள்ளிக்கல்வித்துறைக்கு வலியுறுத்தல்...
சேலம், ஜூலை 28:
சேலம் மாவட்ட அரசுப்பள்ளிக ளில், பதவி உயர்வு மூலம் வந்த ஆய்வக உதவியா ளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மணி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆய்வக உத வியாளர்களுக்கு, எமிஸ் பணி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாது காவலர் மற்றும் இரவு காவலர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று வந்த ஆய்வக உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ஆய்வக உதவியா ளர்களுக்கு எமிஸ் பணியி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளராகபணி இறக்கம் செய்யப்பட்ட பணியா ளர்களுக்கு, உடனடியாக தேர்வுநிலை தகுதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இக்கூட்டத் தில் தர்மலிங்கம், குமார், இளையராஜா, கண்ணன், கதிரேசன், சீதாராமன். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Wednesday, July 31, 2024
ஆய்வக உதவியாளர்களுக்கு EMIS பணியிலிருந்து விலக்கு - பள்ளிக்கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.