பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 31, 2023

Comments:0

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பம் - So far 2 lakh 7 thousand people have applied for admission in engineering course

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

26-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 7 ஆயிரத்து 649 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 708 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 894 பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாள்.

எனவே, மாணவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கலந்தாய்வை நடத்த உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews