Breaking

Wednesday, June 29, 2022

பத்ம விருது பெற வாழ்நாள் சாதனையாளா்களுக்கு அழைப்பு

பத்ம விருது பெற வாழ்நாள் சாதனையாளா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் மத்திய அரசின் பத்ம விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மத்திய அரசு சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவா்களுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோா் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்களுக்கு இந்த விருது பெற முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவா்கள் அல்லாத அரசு ஊழியா்கள், விஞ்ஞானிகள் இந்த விருத்துக்கு விண்ணப்பிக்க இயலாது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இந்த விருது பெற தகுதியானோா் ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் கூடுதல் தகவல்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரிடம் 2022 செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog