பள்ளிக்கல்வித்துறை சார் பில்கோவை, நீலகிரி, திருப் பூர், கரூர், ஈரோடு மாவட் டங்களை உள்ளடக்கிய மண்டல அள விலான ஆய்வுக் கூட்டம் கோவை பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத் தில் நேற்று நடந் தது. கூட்டத்தில் தமிழக ள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை தாங்கி பேசுகையில், "மாவட்ட கல்வி அதிகாரி உள்பட அதிகாரிகள் அலுவலகத்தி லேயே இருக்காமல் அடிக் கடிபள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்துங்கள். மாணவர்கள் ஆசிரியர்க ளிடம் வரம்பு மீறி செயல் பட்டால் அந்த பள்ளிக்கு உடனடியாக சென்று விசாரித்து நடவடிக்கை எடுங்கள். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உடன டியாக அமைக்க வேண் டும். கல்வித்துறை அதிகா ரிகள் தொடக்கக்கல்வியை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும்" என்றார்.
Sunday, April 24, 2022
கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.