Breaking

Tuesday, January 11, 2022

வருமான வரி கணக்கு அவகாசம் மார்ச் 15 வரை நீட்டிப்பு

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிப்பீட்டு ஆண்டு 2021 - 22க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஆண்டு நவ., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இது 2022 பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டது.தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலவரம் மற்றும் 'ஆன்லைன்' வாயிலாக கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் வைத்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog