30 ஆண்டு கடந்த ஊழியர்களுக்கு கட்டாய ஒய்வு தரப்படுமா? அரசு காலி பணியிடங்களுக்கு காத்திருப்போர் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 14, 2021

Comments:0

30 ஆண்டு கடந்த ஊழியர்களுக்கு கட்டாய ஒய்வு தரப்படுமா? அரசு காலி பணியிடங்களுக்கு காத்திருப்போர் எதிர்பார்ப்பு

தமிழக அரசின் பல துறை களில் ஏற்படும் காலிப்ப ணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டி. என்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக மட்டுமே, கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்பட்டு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு, அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் அறிவிப்பு வெளியா கும்போதெல்லாம், ஏரான மான இளைஞர்கள் விண்ண ப்பித்து போட்டித்தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரம், ஏதாவது ஒரு வகையில் அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணத்தில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாக சீனியாரிட்டியை தவறவிடா மல் புதுப்பித்து காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் தொடர்ந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் பல துறைகளிலும் சேர்த்து, ஏறத்தாழ 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.இதில், 30 ஆண்டுகள் பணி யை நிறைவு செய்பவர் கள் (2004க்கு முன்னர் பணி யில் சேர்ந்தவர்கள்) முழு பென்ஷன் பெற தகுதி உடை யவர்க ளாக விளங்குகிறார்கள். அதன்படி, மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் 30 ஆண்டுகளு க்கு மேலாக பணிபுரிந்து வரு வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதில், கருணை அடிப் படை மற்றும் இளம் வயதில் அரசு வேலைவாய்ப்பை பெற் றவர்கள், இப்போது 30 ஆண் டுகளை கடந்தும் பணிபுரிந்து வருகின்றனர். உதாரணமாக, பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர்கள் மற்றும் கருணை அடிப்படையில் நியமனம் பெற்று இளநிலை உதவியா ளர்முதல் கண்காணிப்பாளர் வரையிலான பணியிடங்களில் பணிபுரிபவர்கள், குறிப்பிட்ட சதவீதத்தில் 30 ஆண்டுகள் நிறைவு செய்தும், தொடர்ந்து அரசு பணியில் நீடித்தும் வரு கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews