Breaking

Friday, August 27, 2021

NEET MDS மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறுத்திவைப்பு – மத்திய அரசு தகவல்

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான ஒதுக்கீட்டை பற்றி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற மருத்துவ ஆலோசனை குழு நீட் – எம்.டி.எஸ் 2021 கவுன்சிலிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். முதுகலை மாணவர்களுக்கு முதுகலை நீட் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக பல் மருத்துவ மாணவர்களின் குழு, கவுன்சிலிங் தேதிகளை மிகவும் தாமதமாக அறிவித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கவுன்சிலிங்கை தாமதமாக நடத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இதனால் நீதிமன்றம் கவுன்சிலிங் தேதிகள் தேதிகளை உடனடியாக அறிவிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கவுன்சிலிங் தேதிகள் ஆகஸ்ட் 10 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 20ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி முடிவடையும் என்று எம்சிசி அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய உத்தரவுகளுக்கு பிறகு தான் மருத்துவ கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 25 அன்று பிறப்பித்த உத்தரவில், எம்.டி., எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டை ஓபிசி பிரிவினருக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog