M.Tech படிப்புக்கு நடப்பாண்டில் மட்டும் 69% இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் ஆலோசனை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 16، 2021

Comments:0

M.Tech படிப்புக்கு நடப்பாண்டில் மட்டும் 69% இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் ஆலோசனை!!

சென்னை அண்ணா பல்கலை எம்.டெக் பிரிவில் இரண்டு படிப்புகளை இந்த ஆண்டு ரத்து செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆண்டு மட்டும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என்று உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் எதற்கு?

மத்திய அரசின் நிதி உதவி:
அண்ணா பல்கலையில் உள்ள எம். டெக்., பயோ டெக்னாலஜி., எம்.டெக்., கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரண்டு முதுகலை படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்று பல்கலை நிர்வாகம் அறிவித்தது. காரணம் இந்த படிப்புக்கு மத்திய அரசு 49.5% இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்றும், தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று பல்கலையை அறிவுறுத்தியது. இந்த குழப்பத்தின் காரணமாக இந்த ஆண்டு இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று பல்கலை நிர்வாகம் அறிவித்தது.

வழக்கு:
இந்த படிப்புகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குவதால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்ப்பற்றும் படி பல்கலையை நிர்பந்திக்கிறது என்று மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த படிப்புகளை மீண்டும் இந்த ஆண்டு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். உயர்நீதிமன்ற ஆலோசனை:
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி புகழேந்தி அவர்கள் வரும் 18ம் தேதி வழக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

நிரந்தர ஆசிரியர் தேவை

மேலும், இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்த நீதிபதி, 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது என்று கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة