Breaking

Friday, February 26, 2021

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு – அதிகாரப்பூர்வ தகவல்!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களில் முன்னதாகவே 5 பாடங்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பாடங்கள் குறைக்கப்படாது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
சிபிஎஸ்சி வாரியம்:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே 4 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும், மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
பள்ளி தாமதமாக திறக்கப்பட்ட காரணத்தால் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடங்களில் இருந்து 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்தின் படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 5 முழு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியலில் மேலும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதிகாரிகளின் பதில்:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. கல்வி அதிகாரி ஒருவர், முன்னதாக அறிவிக்கப்பட்டதன் படி, பாடங்கள் குறைக்கப்ட்டுள்ளது.
அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மேலும், பாடங்கள் குறைக்கப்படாது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மே 27 ம் தேதி அன்று நடக்கும் என்று அறிவித்துள்ளார். தேர்வின் முடிவுகள் ஜூலை 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog