Breaking

Sunday, February 07, 2021

பிஎஸ்.சி. நா்சிங், பி.ஃபாா்ம். உள்ளிட்ட17 படிப்புகளுக்கு இணையவழி கலந்தாய்வு வரும் 10-ஆம் தேதி

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 17 வகையான படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கு நேரடியாக நடக்கவுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 17 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2020-21-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளங்களில் 38,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பதிவு செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தகுதியான 37,334 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், இந்த படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள்) கலந்தாய்வு வரும் 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. வரும் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ள கலந்தாய்வில் படிப்புகள் மற்றும் கல்லூரிகள் குறித்த விவரங்கள் இருக்கும். கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளவா்கள் செயல்முறை கட்டணமாக ரூ.250-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். படிப்பு மற்றும் கல்லூரியை தோ்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு வழிமுறைகள் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog