பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நிறைவு: பிடிஎஸ் படிப்புக்கு ஆர்வமில்லை; காத்திருப்போர் 296 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நிறைவு: பிடிஎஸ் படிப்புக்கு ஆர்வமில்லை; காத்திருப்போர் 296

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு உள்ள ஆர்வம், பல் படிப்பான பிடிஎஸ் படிப்புக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. .இதையடுத்து, மருத்துவ கலந்தாய்வின் கடைசி நாளான நேற்று தரவரிசை எண் 4891 முதல் 5441 வரை உள்ள 551 பேர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. இதில் 393 பேர் கலந்துகொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் 42 இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 10 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 15 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 26 இடங்களும் என மொத்தம் 93 இடங்கள் நேற்றைய கலந்தாய்வில் நிரப்பட்டன. 296 பேர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்நிலையில் இன்று முதல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கு கிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews