அடுத்த ஆண்டு கூடுதலாக 1,650 மருத்துவ இடங்கள் - முதல்வர் பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 27, 2020

Comments:0

அடுத்த ஆண்டு கூடுதலாக 1,650 மருத்துவ இடங்கள் - முதல்வர் பழனிசாமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த வாரம் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு முதலில் துணை முதல்வர் மரியாதை செலுத்தினார், அதை தொடர்ந்து முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது; * எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு பிரச்சார பொதுக் கூட்டம் தொடங்கியுள்ளது. * தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். * அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. * எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. * அதிமுக கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களும் பூமி உள்ள வரை நிலைத்து இருக்கும். * அதிமுகவுக்கு நாட்டு மக்கள் தான் வாரிசுகள்எதிரிகள் கூட பாராட்ட கூடிய ஒரே தலைவர் எம்ஜிஆர் ஆவார். * அதிமுகவை மீண்டும் ஒன்றாக இணைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும். * சாதாரண தொண்டனும் முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உண்டு. அதிமுகவில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி தானாக வந்து சேரும். * எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். * ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அதிமுக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. * அடுத்த ஆண்டு 11 மருத்துவ கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. * உயர்கல்வி படிப்போரின் சதவீதத்தை 49 சதவீதமாக உயர்த்தியது அதிமுக அரசு தான். இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். * நீர் மேலாண்மை திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில உள்ளது. * சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள 4 ஏரிகளும் நிரம்பி உள்ளன. * சீர்மிகு சென்னை திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. * சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் 3000-லிருந்து 19-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews