உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அரசாணை விபரம்: எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் படிப்புகளில் சேரும் மருத்துவர்கள் நுழைவு தேர்வு மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்த மதிப்பெண்களில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். மீதமுள்ள 10 மதிப்பெண்கள் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்படும். 1990 முதல் 2000வரை இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மருத்துவ மேல்படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் மத்திய தொகுப்புக்கும் மீதமுள்ள 50 சதவீதம் மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. இந்த 50 சதவீத இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தகுதி அடிப்படையில் அதாவது அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆண்டுகளின் அடிப்படையில், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.மாநில அரசின் ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவீத இடங்களில் நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும். நீட் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களில் 90 சதவீதம் கணக்கிடப்பட்டு மீதமுள்ள 10 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்களாக வழங்கப்படும். அதாவது, கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு 5 மதிப்பெண்களும், தொலைதூர கிராமங்களில் பணியாற்றுபவர்களுக்கு 8 மதிப்பெண்களும், எளிதில் செல்லமுடியாத பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு 9 மதிப்பெண்களும், எளிதில் செல்ல முடியாத மலை பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 10 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் (வெயிட்டேஜ்) வழங்கப்படும். இந்நிலையில், மாநில இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடத்தை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான டிஎம், எம்சிஎச் படிப்புகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 25 அரசு மருத்துவ கல்லூரிகளும், 14 சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளை அமைக்கும் தமிழக அரசின் முடிவின்படி 11 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் பல கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பிற்கான கட்டமைப்புகள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது மாநில அரசின் ஒதுக்கீட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews