கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 23, 2020

Comments:0

கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநில எழுத்தறிவு இயக்கத்தின் முன்னெடுப்பால், கேரளாவில் திருநங்கைகள் 18 பேர், 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளனர். இவர்கள் சமன்வயா திட்டத்தின் கீழ் கல்வி பெற்றுள்ளனர். இத்திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகையோடு இலவசமாகக் கற்பித்தலை நிகழ்த்துவது ஆகும். இதன்படி 10-ம் வகுப்புக்கு இணையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவர். இதுவே 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் வென்றோருக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை கிடைக்கும். அவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 22 திருநங்கைகள் தேர்வெழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 திருநங்கைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமன்வயா திட்டத்தின் கீழ் இதுவரை 39 திருநங்கைகளுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. 30 திருநங்கைகள் 10-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 62 திருநங்கைகள் 12-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா, தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews