முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்களை, நேரடியாக பெறுவதை நிறுத்தும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர், வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட விதவை ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம் என, எட்டு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெறுவதற்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பதற்கான வசதியை, தேசிய தகவல் மையம் ஏற்படுத்தி உள்ளது. சில மாவட்டங்கள் மட்டுமே, ஆன்லைன் வழியே, விண்ணப்பங்களை பெற்று தீர்வு காண்கின்றன.எனவே, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களிடம், விண்ணப்பங்களை நேரடியாக வாங்குவதை தவிர்க்கும் படி, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.ஆன்லைன் வழியே மட்டும், விண்ணப்பங்களை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.