பாட புத்தகம் தயாரிப்பு நாளை முதல் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

Comments:0

பாட புத்தகம் தயாரிப்பு நாளை முதல் துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பாடப் புத்தக தயாரிப்புக்காக, பாடநுால் நிறுவன பணியாளர்கள், நாளை முதல் பணிக்கு வர வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.த மிழக பாடநுால் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவை கழகத்தின் குரூப் - ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள், நாளை முதல், அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும். குரூப் - சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், தங்கள் துறை தலைவர்களின் உத்தரவுக்கு ஏற்ப, அலுவலகத்துக்கு வர வேண்டும். ஆனால், 33 சதவீதம் பேர் மட்டுமே, அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
சுகாதாரத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் இருந்தால், அவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. பணிக்கு வரும் போது, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews