அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி - ஜாக்டோ ஜியோ கண்டனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 28, 2020

Comments:0

அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி - ஜாக்டோ ஜியோ கண்டனம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா காரணமாக கடந்த 35 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் தமிழக அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஊதியம் தொடர்பாக பெறும் சலுகைகளில் பலவற்றை குறைத்து தமிழக அரசு இன்று 3 அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
அவை,
1). 1.1.2020 முதல் 30.6.2021வரை அகவிலைப்படி (DA )நிறுத்தி வைப்பு. அகவிலைப்படி 17% மட்டுமே தொடரும்.
2). 27.4.2020 முதல் ஈட்டியவிடுப்பு (EL) ஓராண்டு காலம் நிறுத்தி வைப்பு
3). 1.4.2020 முதல் 30.06.2020 வரை முதல் காலாண்டிற்கு சேமநலநிதி வட்டி (GPF INTEREST) விகிதம் 7.1%. வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை.வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கண்டனம்!
தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்.
அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
அகவிலைப்படி, பி.எப்., வட்டி குறைப்பு தொடர்பான அரசாணைகளை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ- - ஜியோ' வலியுறுத்தி உள்ளது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை:இந்த இக்கட்டான சூழலில், போராடி பெற்ற உரிமையான, சரண் விடுப்பை, ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இது, சர்வாதிகார போக்காகும்.இது போதாதென்று, வருங்கால வைப்பு நிதியான, பி.எப்.,புக்கு வழங்கப்படும் வட்டியை, 7.9 சதவீதத்தில் இருந்து, 7.1 சதவீதமாக குறைத்து உள்ளது. மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசும், 2020 ஜனவரி முதல், 2021 ஜூலை வரை, அகவிலைப்படியை நிறுத்திஉள்ளது.இந்த நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இதற்கான அரசாணைகளை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 35 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் தமிழக அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஊதியம் தொடர்பாக பெறும் சலுகைகளில் பலவற்றை குறைத்து தமிழக அரசு இன்று 3 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அவை, 1). 1.1.2020 முதல் 30.6.2021வரை அகவிலைப்படி (DA )நிறுத்தி வைப்பு. அகவிலைப்படி 17% மட்டுமே தொடரும். 2). 27.4.2020 முதல் ஈட்டியவிடுப்பு (EL) ஓராண்டு காலம் நிறுத்தி வைப்பு 3). 1.4.2020 முதல் 30.06.2020 வரை முதல் காலாண்டிற்கு சேமநலநிதி வட்டி (GPF INTEREST) விகிதம் 7.1%. வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை.வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கண்டனம்! தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம். அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews