மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தம் (முழு விவரம்) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 23, 2020

Comments:0

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தம் (முழு விவரம்)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு. அதன்படி , மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
1 ஜனவரி 2020 ,1 ஜூலை 2020 மற்றும் ,2 ஜனவரி 2021 ஆகிய தேதிகள் முதல் வழங்கப்படும் அகவிலைப்படி(DA) நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஆனால் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு மீண்டும் 1 ஜூலை2021 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.01.01.2020 முதல் 30 6 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படாது ஏறக்குறைய 18 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்... 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்பட மாட்டாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப் பட்டால்... 01.01.2020, 01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டு மொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கிடைக்காது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 2021 ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.இதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது. அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், சுகாதாரத்துறைக்கு அதிக பணம் தேவைப்படுவதாலும், சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மற்றும் ஏழைகளின் நலத்திட்டங்கள் தேவைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை வரையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. 2021 ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021 மார்ச் வரை மத்திய அரசுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews