'மக்கள் வெளியே சென்றால் ஆவணங்கள் அவசியம்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 25, 2020

Comments:0

'மக்கள் வெளியே சென்றால் ஆவணங்கள் அவசியம்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''பொது மக்கள் வெளியே சென்றால், அரசு வழங்கியுள்ள ஆவணங்களை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார். 'கொரோனா வைரஸ்' தடுப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர், சீதாலட்சுமி தலைமையில், ஆய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல செயல்படும்; ஆனால், சில்லரை விற்பனை கிடையாது. மொத்த விலையில் வாங்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே, விற்பனை நடைபெறும். இதுகுறித்து, வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில், 4,000 பணியாளர்கள், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, முழு உடல் கவசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு, தினமும் முக கவசம், கையுறை வழங்கப்படுகிறது. அரசு அனுமதித்துள்ள, ஐ.டி., நிறுவனங்களில், 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள், அரசு வழங்கியுள்ள ஆவணங்கள் மற்றும் நிறுவன அடையாள அட்டைகளை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். மருத்துவ கண்காணிப்பு குழு, போலீசார் சோதனையில், ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே விடுவிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ''சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 400 ரோந்து வாகனங்களில், பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews