அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% தமிழக மாணவர்களுக்கே ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 06, 2020

Comments:0

அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% தமிழக மாணவர்களுக்கே ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 85 சதவீதம் தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நாமக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 338.76 கோடியில், புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 1167.21 கோடியில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 புதிய மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தார். அவரின் வழியில் ஆட்சி செய்யும் நாங்கள், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.
கடந்த ஆண்டு 355 கூடுதல் இடங்களை மருத்துவ கல்லூரியில் பெற்றோம். தற்போது 11 புதிய கல்லூரிகள் அமைவதன் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் அதிகம் படிப்பதாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 85 சதவீத இடங்கள், தமிழக மாணவர்களுக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. 15 சதவீதம் போட்டி தேர்வின் மூலம் ஆல் இன்டியா கோட்டா என்ற அளவில் ஒதுக்கப்படுகிறது. அதிலும் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்வாகிறார்கள். தண்ணீர் பிரச்னை இல்லாத மாநிலமாக, தமிழகத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. பெரிய ஓடைகளிலும் தடுப்பணை அமைக்கப்படுகிறது. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். வறட்சியான பகுதியை கண்டறிந்து அங்குள்ள நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, செழிப்பான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து வசதிக்காக மாவட்டங்களில் சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது. நாமக்கல்-திருச்சி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அந்த பணி தொடங்கப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவியர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நல்லவர் வளர்த்த கிளிப்பிள்ளை போல, அதிமுக என்ற இயக்கம் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வரவேற்றார். மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, சரோஜா, அன்பழகன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டர் மெகராஜ் நன்றி கூறினார். கரூரில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடம் திறப்பு: கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டியில் ரூ.269.59 கோடி மதிப்பில் 27.49 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews