அரசு பள்ளிக்கு கலெக்டர் ரூ.1 லட்சம் நிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 26، 2020

Comments:0

அரசு பள்ளிக்கு கலெக்டர் ரூ.1 லட்சம் நிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக, கடலுார் கலெக்டர் அன்புச்செல்வன், 1 லட்சம் ரூபாயை, தன் சொந்த ஊர் அரசு பள்ளி பெயரில், 'டிபாசிட்' செய்துள்ளார். தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 900க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.அத்துடன், பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். இதற்காக, நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது.
இதில், அதே ஊரைச் சேர்ந்த, கடலுார் கலெக்டர் அன்புச்செல்வனும் பங்கேற்றார். அப்போது, தன் சொந்தப் பணம், 1 லட்சத்தை, பள்ளி பெயரில், வங்கியில் டிபாசிட் செய்த ஆவணத்தை, தலைமை ஆசிரியர் மனோகரனிடம் அன்புச்செல்வன் வழங்கினார். அதில், வரும் வட்டித் தொகையில் இருந்து, பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة