அரசுப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப லேப்' வசதி வரும் கல்வியாண்டில் முழுமையாக அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 29, 2020

Comments:0

அரசுப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப லேப்' வசதி வரும் கல்வியாண்டில் முழுமையாக அமல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்த,' ஹைடெக் - லேப்' அமைக்கப்பட உள்ளன.தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்ததும், உயர்க்கல்விக்கு செல்லும் போது, அதற்கான நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும், கணினி சார்ந்தவையாகவே உள்ளன. இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணினிப் பயிற்சியை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ெஹ டெக் - லேப்) அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
உயர்நிலைப்பள்ளிகளில், 11 கணினிகளும், மேல்நிலைப்பள்ளிகளில், 21 கணினிகளும் வழங்கப்பட உள்ளன.கடந்த மாதம், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி வழியில் திறன் சோதனை தேர்வுகள் நடத்தப்பட்டன.புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடம் சார்ந்த விரிவாக கூடுதல் தகவல்களுக்கு,'க்யூஆர்' கோடு என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். பாடவாரியாக, எளிமையான முறையில் பதிவேற்றம் செய்து புரிந்து கொள்வது, ஆன்லைன் தேர்வு குறித்த தெளிவுகளை பெறுவது என பல வகைகயில் மாணவர்களுக்கு,' ஹை டெக் லேப்'பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்கேற்ப, ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு, இரண்டு பாட வேளை, கணினி சார்ந்த வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கால அட்டவணை தயார் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 29 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை சமா்ப்பிக்க மாவட்டஅளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 3, 090 அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும், 2, 939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லாா்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு உயா்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் 10 கணினிகள் உள்ளிட்ட 12 உபகரணங்களும், மேல்நிலைப் பள்ளிக்கு 20 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் உறுதி செய்ய வேண்டும்.மேலும், மாவட்ட அளவில் உயா்தொழில்நுட்ப ஆய்வகம் நிறுவுவதற்கு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவினா் பள்ளி வாரியாக ஆய்வுசெய்து தயாரிக்கும் அறிக்கையில் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகங்கள், வரையறையின்படி நிறுவப்பட்டுள்ளதா? என்பதைக் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews