தேர்தல் குளறுபடியை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்கள் மறுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 08, 2020

Comments:0

தேர்தல் குளறுபடியை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்கள் மறுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
காரிமங்கலம் அருகே உள்ளாட்சி தேர்தல் குளறுபடியை கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூமாண்டஅள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், ஏணி சின்னத்தில் திமுகவைச் சேர்ந்த கந்தையன், கை உருளை சின்னத்தில் அதிமுகவைச் சேர்ந்த கவிதா நாகராஜன் உள்பட 4 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது, பூமாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேக்கனாம்பட்டி வாக்குச்சாவடியில் மொத்தம் 388 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், அதில் 251 வாக்குச்சீட்டுகளில் ஏணி மற்றும் கை உருளை சின்னங்களில் முத்திரை பதிவாகியிருந்தது. சந்தேகம் உள்ளதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர், போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் வாக்கு எண்ணி கவிதா நாகராஜன் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த முறைகேட்டை கண்டித்து, அப்பகுதி மக்கள் கடந்த 5ம் தேதி, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டும், ரேஷன் கடையை திறக்க விடாமல், வீடுகளின் முன் கருப்பு கொடியை கட்டியும், எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் தங்கள் குழந்தைகளை மேக்கனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அனுப்பவில்லை. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் உமாதேவி ஆகியோர் ேமக்கனாம்பட்டி கிராமத்திற்கு சென்று ேபச்சு வார்த்தை நடத்தியும் முறைகேட்டிற்கு தீர்வு கிடைக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என மக்கள் கூறியதால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், மேக்கனாம்பட்டியில் செயல்படும் உயர்நிலைப்பள்ளிக்கும் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் நேற்று செல்லவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள ேரஷன் கடையை கடந்த 3நாட்களாக மக்கள் திறக்க விடவில்லை.
திமுக பெண் கவுன்சிலர் கடத்தல் தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக 6, அதிமுக 4 இடங்களில் வெற்றிபெற்றனர். திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு உரிமை கோரும் நிலை உள்ளது. நேற்று முன்தினம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். பதவியேற்பு முடிந்த பின்னர் திமுக 1வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தியை அவரது கணவருடன் நள்ளிரவு அதிமுகவினர் சென்னைக்கு கடத்திவிட்டதாக தகவல் பரவியது. இதையறிந்த திமுக நிர்வாகிகள் நேற்று திம்மிநாயக்கன்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த போடி புறநகர் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews