500 காலி பணியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

500 காலி பணியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 காலி பணியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசின் பிற துறைகளில் பணி அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள 500 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு இதில் 491 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிலையில், இவர்களின் பணியிடங்கள் தற்போது காலிப்பணியிடங்களாக மாறியுள்ளது.
இதனால், கடைகளில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, இந்த காலி பணியிடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் ஆட்களை உடனடியாக நியமனம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், எந்த முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் காலிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பல இடங்களில் விற்பனை அதிகமாக நடைபெறும் கடைகளுக்கு அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் தான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இதுபோன்ற பிரச்னைகளை கவனத்தில் கொண்டு தற்போது உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews