காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்ற ஆர்வம் இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 08, 2019

Comments:0

காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்ற ஆர்வம் இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக போலீஸ் பயிற்சி பள்ளி பணிக்கு வர, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,க்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், காவல், சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, 8,477 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு நடத்தியது.இதில் வெற்றி பெற்ற, 46 ஆயிரத்து, 700 பேருக்கு, நேற்று முன்தினம் முதல் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது.விண்ணப்பிக்க அழைப்புஇத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, 2020 ஜனவரி இறுதியில், பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.இதற்காக, தமிழகத்தில் உள்ள எட்டு நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளுடன், கூடுதலாக, 26 தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிகளை ஏற்படுத்த முடிவு செய்து, அதற்கான பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
ஒரு பயிற்சி பள்ளிக்கு, டி.எஸ்.பி., தலைமையில், இரு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ., 16 போலீசார் நியமிக்க வேண்டும். நிரந்தர பயிற்சி பள்ளிகளில், ஏற்கனவே ஆட்கள் உள்ள நிலையில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு, அதிகாரிகள், போலீசாரை நியமிக்க, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் யாரும் ஆர்வம் காட்டவில்லை.300 போலீசார் விருப்பம்அப்பணிக்கு சென்றால், 'மாமூல் வாழ்க்கை' பாதிக்கப்படும் என்பதால், அதிகாரிகள் மட்டுமின்றி, போலீசாரும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:காவலர் பயிற்சி பள்ளிக்கு, தற்போதைய நிலையில், 30 டி.எஸ்.பி.,க்கள், 60க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர் உட்பட, 600க்கும் மேற்பட்ட போலீசார் தேவைப்படுகின்றனர். ஆனால், 10 டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார் மட்டும், விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதனால், ஏற்கனவே பயிற்சி பள்ளியில் பணிபுரிந்தவர்களை, மீண்டும், அதே பணிக்கு நியமிக்கவும், அதில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு, அந்தந்த மாநகர, மாவட்ட ஆயுதப்படைகளில் இருந்து போலீசாரை நியமிக்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews