பள்ளி கேன்டீன், சுற்றுவட்டாரக் கடைகளில் துரித உணவுகளுக்குத் தடை: மத்திய அரசு திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 06, 2019

Comments:0

பள்ளி கேன்டீன், சுற்றுவட்டாரக் கடைகளில் துரித உணவுகளுக்குத் தடை: மத்திய அரசு திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கேன்டீன்களில் துரித உணவு விற்பனை மற்றும் அது தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை, பள்ளி கேன்டீன், சமையல் கூடம் உள்ளிட்ட சில இடங்களில் துரித உணவுகளை விற்கவும் விளம்பரம் செய்வதற்கும் தடை விதிப்பது குறித்து வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ''அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ள உணவுகளைப் பள்ளிக் குழந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. பள்ளி கேன்டீன்கள், உணவகங்கள், விடுதி சமையல் கூடங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் இருந்து 50 மீ. தொலைவு வரை உள்ள இடங்களில் இவற்றை விற்கக் கூடாது. அதேபோல மேலே குறிப்பிட்ட இடங்களில் துரித, கொழுப்பு உணவுகள் குறித்து விளம்பரங்கள் செய்யப்படுவதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தப்படும். நல்ல உணவு மட்டுமே மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தரமற்ற பொருட்கள் அவர்களது உடல்நலனைப் பாதிக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை வழங்குவதை உணவு நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவே குழந்தைகளை நல்லபடியாக உணர வைக்கும்; வளர வைக்கும். அவர்கள் விரைந்து கற்க உதவும். சிறு வயதில் இருந்தே குழந்தைகளிடம் சரியான உணவுப் பழக்கங்களை முன்னெடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை அமைத்துள்ள கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன மாதிரியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று ஆய்வு செய்து, அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். உணவுத்துறை சார்ந்து இயங்கும் அனைத்து நபர்களிடமும் இவை குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டு, பின்னர் முடிவெடுக்கப்படும்''. இவ்வாறு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews