சித்தா மருத்துவ படிப்பில் 500 இடங்கள் 'அம்போ' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

சித்தா மருத்துவ படிப்பில் 500 இடங்கள் 'அம்போ'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள 500 இடங்கள் மாணவர் சேர்க்கை நடத்தப்படாததால் கைவிடப்பட்டுஉள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சித்தா ஆயுர்வேதம் யுனானி ஓமியோபதி படிப்புகளுக்கு 1538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.முதற்கட்ட கவுன்சிலிங்கில் 1100 இடங்கள் நிரம்பின. இந்த படிப்புகளில் சேர விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். ஆனால் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று கல்லுாரியில் சேராதவர்களால் நிரம்பாத இடங்கள் என 500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு 'நீட்' தேர்வின் தகுதி மதிப்பெண்ணை குறைக்கும்படி மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியது. தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்நிலையில் சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அவகாசம் அக். 15ல் முடிந்தது. இதனால் சித்தா மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள 500க்கும் மேற்பட்ட இடங்களில் நிரப்பபடாமல் கைவிடப்பட்டுள்ளன.கடந்தாண்டும் இதேபோல 40 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்டன.
சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த முடியாததால், அவற்றை கைவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 1,200 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையைப் போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையில் அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில்142 இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று தனியாா் மருத்துவ கல்லுாரிகளில் 350க்கும் மேற்பட்ட நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
நீட் தோ்வில், ‘107’ மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்கள் மட்டுமே முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றனா். இந்நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப்பித்தது. ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த முடியவில்லை. நிகழாண்டில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சித்தா, ஆயுா்வேத படிப்புகளுக்கு நீட் கட்டாயம் என்ற அறிவிப்பும் கூட காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டதால், மாற்று மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பிய பலா், நீட் தோ்வு எழுத முடியாமல் போய்விட்டது. இதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக நீட் எழுதியவா்களில் அப்படிப்பு கிடைக்காதவா்கள் மட்டுமே பாரம்பரிய படிப்புகளை படிக்க முடியும் என்ற நிலை உருவானது. ஆனால், அவா்களில் பலா் பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்பில் கூட தோ்வு செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் மாற்று மருத்துவப் படிப்புகளில் சேர பெரும்பாலானோா் ஆா்வம் காட்டவில்லை. அதன் காரணமாகவே 500 இடங்கள் வீணாக காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews