பணிமாறுதல், சம்பள உயர்வு தரவேண்டும் : தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 27, 2019

Comments:0

பணிமாறுதல், சம்பள உயர்வு தரவேண்டும் : தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பணிமாறுதல், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு தரவேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா 2012ல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை பகுதிநேரமாக நடத்திட 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். தொகுப்பூதியம் 5ஆயிரம் தரப்பட்டது. இதனை 2ஆயிரம் உயர்த்தி நிலுவைத்தொகை 12 ஆயிரத்துடன் இவரது ஆட்சிகாலத்தில் தரப்பட்டது. இவரது மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி 700 மட்டுமே தொகுப்பூதியத்தை 2017 ஆகஸ்டில் உயர்த்தி வழங்கினார். முன்புபோல ஊதிய உயர்வு ஏப்ரல் முதல் கணக்கிட்டு தராததால் 7700 ஆக தொகுப்பூதியம் உயர்ந்தது. இந்த சொற்ப ஊதியத்தாலும் கடும்விலைவாசி உயர்வாலும் இவர்கள் தங்களது குடும்பங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனுடன் இன்னும் இவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத ஊதிய உயர்வு தரப்படாமல் உள்ளதால் மிகவும் கவலையுடன் உள்ளனர். இதனை கொடுத்திருந்தால் இந்நேரம் ₹10ஆயிரம் சம்பளமாவது கிடைத்திருக்கும். ஊதியக்குழு அனைவருக்கும் பொதுவானது. இதனை மத்தியஅரசின் திட்டவேலையில் தமிழகஅரசு நியமித்த இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை தராமல் உள்ளது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
அவ்வப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதைப்போலவே தொகுப்பூதியப்பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியஉயர்வுகள் விலைவாசிஉயர்வுக்கேற்ப உயர்த்தி தருவதே நியாயமானது. கல்வித்துறையில் ஒருங்கிணைந்த கல்வியில் ஒரு அங்கமாக 9 கல்வி ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 7700 தொகுப்பூதியத்தை தவிர வேறெந்த சம்பள சலுகைகளும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 14ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் வருங்கால வைப்பு நிதி, 6 மாதம் மகப்பேறு காலவிடுப்பு, இதர விடுப்பு சலுகைகளும் கிடைக்கின்றது. கர்நாடகா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் 10ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் இஎஸ்ஐ மற்றும் 3 பள்ளிகளில் பணியும் கிடைக்கின்றது.
ஒடிசா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சம்பளத்துடன் இபிஎப் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவும், இதர சலுகைகளும் தர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதுவும் பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் உள்ளவர்கள். மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை என தமிழக அரசு கைவிரித்து வருகிறது. அரசின் இந்த பதில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிவருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில், தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews