நீட் தேர்வு முறைகேடு: 5,000 மருத்துவ மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க கல்வி இயக்குனரகம் முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 17, 2019

Comments:0

நீட் தேர்வு முறைகேடு: 5,000 மருத்துவ மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க கல்வி இயக்குனரகம் முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 5000 மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க முடிவெடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் மாணவர்களின் பதிவுகளை பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரி மாணவன் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர்களின் சேர்க்கை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில், இர்பான் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவன் உதித்சூர்யாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 14ம் தேதி மாலை 5 மணி அளவில் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், 15,16,17 ஆகிய 3 நாட்களுக்குள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் இரண்டு கட்டைவிரல் ரேகையை பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்த கைரேகைகள் உள்ள ஆவணத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்குள் அனைத்து மாணவர்களின் கைரேகைகளை பெற்று இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல, தேசிய தேர்வு முகமையிடம் இருந்து தேர்வின் போது மாணவர்கள் வைத்த கைரேகைகளை தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக , சுகாதாரத்துறை மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களும் ஓரிரு தினங்களில் வரவுள்ளது. இரு கைரேகை ஆவணங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் நடவடிக்கையில் கல்வி இயக்குனரகம் ஈடுபட உள்ளது. இதன் மூலம் வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். சிலர் ஆள்மாறாட்டம் செய்து வெளி மாநிலங்களில் தேர்வெழுதியிருக்கிறார்கள். இந்தவிவகாரத்தில் இதுவரை 19 பேர் மீது சந்தேக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள், இது வெறும் மாநில அளவில் நடந்த முறைகேடு அல்ல, தேசிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்த வழக்கி ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், நடப்புக் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 4,250 மாணவ, மாணவிகளின் கைரேகைகளைப் பதிவு செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது குறித்து உத்தரவிட்ட போது நீதிபதிகள் கூறியதாவது, தேர்வெழுதும் முன்பு ஆடை, தலைமுடி என பல கெடுபிடிகளை செய்து சோதனை செய்தார்களே? முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்களே? என்று கேள்வி எழுப்பியதோடு, இனி, நீட் தேர்வின் போது கைரேகை மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில் 19 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள், இது மாநில அளிவிலான முறைக்கேடு இல்லை, இது தேசிய அளவிலான முறைக்கேடு. பிற மாநில தேர்வு மையங்களில் நீட் எழுதியிருப்பதால் ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews