ஹிந்தி தேர்வுக்கு பாடத்திட்டம் மாறியதால் குழப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 23, 2019

Comments:0

ஹிந்தி தேர்வுக்கு பாடத்திட்டம் மாறியதால் குழப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய பாடத்திட்டம் அறிமுகமாவதால், பழைய பாட திட்டத்தில் ஹிந்த படித்தவர்களுக்கு, தேர்வில் சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையை தலைமையகமாக வைத்து செயல்படும், தென்னிந்திய ஹிந்தி பிரசார சபாவின் பாட திட்டப்படி, தனியார் பள்ளிகள், தனியார் மையங்களில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஹிந்தி படிப்பவர்களுக்கு, பிரசார சபா சார்பில், எட்டு வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் என, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். அதிர்ச்சிதென் மாநிலங்களில், ஹிந்தி படிப்போர் அதிகம் உடைய மாநிலமாக, தமிழகம் உள்ளது. அதிலும், சென்னையில் அதிகம் பேர், ஹிந்தி கற்றுக் கொள்கின்றனர். ஆண்டுதோறும், தமிழகத்தில் மட்டும், ஹிந்தி படிப்பதற்கு, ஒரு லட்சம் பேர், புதிதாக பதிவு செய்கின்றனர். சென்னையில், 220 உட்பட, தமிழகம் முழுவதும், 360 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.தமிழகத்தில் தான், ஹிந்தி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அதிகம் உள்ளனர். தென் மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும், 11 ஆயிரம் ஹிந்தி பண்டிட்கள் உள்ளனர். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்த்து, 4,000 ஹிந்தி பண்டிட்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஹிந்தி தேர்வுக்கான பாடத்திட்டம் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. பல தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே, பழைய பாடத்திட்டத்தில் படித்தவர்கள், இந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வுகள் எழுதினர். தேர்ச்சி பெறாதவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என, பயிற்சி மையங்கள் அறிவுறுத்தி உள்ளன. அதனால், ஏற்கனவே பல மாதங்களாக, ஹிந்திக்கு சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய்மொழி தமிழாக இருந்தாலும், தேசிய அளவில் அதிகம் பேசப்படும், ஹிந்தியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படித்தவர்களுக்கு, இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. முற்றுப்புள்ளி பழைய பாடத்திட்டத்தை படித்து விட்டு, மீண்டும் புதிய பாடத்திட்டத்தை படிக்க வேண்டும் என்பது, மாணவர்களின் ஆர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது. எனவே, பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, அதே பாடத் திட்டத்தில், வரும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு எழுதுவதற்கு, ஹிந்தி பிரசார சபா சலுகை வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews