புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து- 4 மாணவர்கள் காயம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து- 4 மாணவர்கள் காயம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருச்செந்தூர் மாவட்டம் அமலிநகரில் கடந்த ஆண்டு புதிதாக அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு இன்று, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்
திருச்செந்தூர் அமலிநகரில் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில், சுமார் 140-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, மாணவர்கள் வழக்கம்போல் வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்றாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வகுப்பறையில் இருந்த, அக்ஸன், ஜெயம், ஆண்ட்ரூ, மற்றும் மெர்சிராணி ஆகிய நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு, திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன
சிறிது நேரத்தில் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியதால், பதறிபோன மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி விபத்து குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மூன்றாம் வகுப்பு சென்ற அவர், மேற்கூரை இடிந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காயமடைந்த மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கட்டிடம் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகே மாணவர்களே பள்ளிக்கு அனுப்புவோம். பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews