தரமற்ற முறையில் அரசு பள்ளி கட்டிட பணி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

தரமற்ற முறையில் அரசு பள்ளி கட்டிட பணி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் சுவரில் கை வைத்தாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தரமற்ற பணியே இதற்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மாந்தோப்பு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் ரவுண்டானா பாலம் கட்டுமான பணிக்காக, இந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அந்த கட்டிடத்திற்கு பதிலாக பொதுப்பணித்துறை சார்பில் ₹2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரமற்ற பணியால் புதிய கட்டிடத்தின் சுவர்களை கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுவதாக கூறப்படுகிறது. இதனால், கட்டிடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாக மாறியுள்ளதால், தரமற்ற முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை கண்டித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த பள்ளி கட்டிடம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் உள்ளதால், சுவரை கையால் தொட்டாலே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. இதனால், மழைக்காலத்தின் போது கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளோம். பள்ளியில் உள்ள குறைகளைப் பற்றி கேள்வி கேட்டால் பொதுமக்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருப்பவர்களுக்கும் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.எனவே ஆபத்தான நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த தரமற்ற கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து மாணவர்கள் பாதுகாப்பாக படிக்க உகந்த கட்டிடமா? என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த பள்ளி கட்டிடத்தை திறக்க விடமாட்டோம். மேலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி மேற்கொண்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews