👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், நான்கு மாணவியர், திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை, 9:30 மணிக்கு, இறை வணக்கம் நடந்தது. அப்போது, ஆறு - ஒன்பதாம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவியர், திடீரென மயக்கமடைந்தனர். இதில், ஒரு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டது.ஆசிரியர்கள் உடனடியாக, அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வலிப்பு ஏற்பட்ட மாணவி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்ற மாணவியரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள், காலை உணவு சாப்பிடாமல் வந்ததால் மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.தகவல் அறிந்த, புதுப்பட்டு வட்டார, நடமாடும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள், அப்பள்ளிக்குச் சென்று, அனைத்து மாணவர்களுக்கும் உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U