👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது ,எனவே அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று எழுப்பினார்.இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார்.அதில், தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.மேலும் உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்.அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்.
பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U