👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிவுசார் சொத்துரிமை குறித்த தேசியப் பயிலரங்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இரு நாள்கள் நடைபெறும் அந்தப் பயிலரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், மருத்துவத் துறை சார்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். பல்வேறு அமர்வுகளாக நடைபெறும் அந்நிகழ்வில் காப்புரிமை, புவிசார் குறியீடு, வர்த்தக் குறியீடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் துறைசார் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.
தமிழ்நாடு மாநில அறிவியல் - தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்தப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தொடக்க விழாவில், மாநில அறிவியல் - தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், கவுன்சிலின் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர். ஸ்ரீனிவாசன், பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் பரமேஸ்வரி, பேராசிரியர் டாக்டர் ஜி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பயிலரங்கு நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்றும், அதுதொடர்பான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதற்கான முயற்சி இது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U