👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழத்தில் அண்ணா பல்கலை மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே 2ம் தேதி தொடங்கி மே மாத இறுதிவரை நடந்தது. ஜூன் 7ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, ஜூன் 20ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 26ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடந்தது. இந்த கவுன்சலிங்கில் இதுவரை 3 சுற்று கவுன்சலிங் நடந்துள்ளது. அதன்படி 47850 இடங்–்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மீதம் உள்ள இடங்களில் துணை கவுன்சலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்து, 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு நேற்று வரை 1050 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
அசல் சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் கவுன்சலிங் ஆகியவை நேர்முகமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத தரமணியில் உள்ள மத்திய தொழில் நுட்ப கல்லூரியில் நடக்கும். சான்று சரிபார்ப்புக்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் ஆன்லைன் மூலம் இ-கால் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். மாணவர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணை கவுன்சலிங்குக்கு முன்னர் அசல் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U