👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நவீன வசதிகள், ஏசி வகுப்பறைகள், காணொலி மூலம் பாடங்கள் போன்ற சிறப்பம்சங்களுடன் தனியார் பள்ளிக்கு இணையாக உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி அசத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியன் கீழ புதுத்தெருவில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகள் வரை உள்ளன. இப்பள்ளியின் முதல் வகுப்பறை ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட சூழலில் கணினி மூலம் அகண்ட திரையில் காணொளிக் காட்சியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் பிரின்ஸ், உதவி ஆசிரியர் மகாலிங்கம் கூறும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன் இப்பள்ளியின் வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. இதனால் இங்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர் மிகவும் தயங்கினர். இந்நிலையில் செய்தி ஊடகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மூலம் இப்பள்ளியின் பழம்பெருமை அரசுக்கு தெரிய வந்தது. அதன் மூலம் பள்ளிக்கு வளர்ச்சி ஆரம்பித்தது. இதையடுத்து பள்ளிக் கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டன.
தகவலறிந்த சென்னைத் தொழிலதிபர் சிவகுமார் மூலம் சென்னை ரோட்டரி சங்கம் ஜெமினி சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. இந்த வகுப்பறையில் நவீன நூலகம், மேஜைகள், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறையின் மூலம் தினமும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தின் செயல்பாடுகளை தீக்ஷா என்ற அரசு செயலி மூலம் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வீடியோ புரொஜக்டர் மூலம் திரையில் விளக்கமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்களும் எளிதாக புரிந்து கொண்டு ஆர்வமுடன் கற்று வருகின்றனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U