👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு ஊழியர் குடியிருப்புக்கு...உறக்கத்தில் வீட்டு வசதி வாரியம்கோவை, மே 5-கோவையில் இருந்து பணியிட மாறுதல் பெற்று, வெளியூர் சென்ற அரசு ஊழியர்களில் சிலர், ரேஸ்கோர்ஸ் அரசு ஊழியர் குடியிருப்பை காலி செய்யாமல், வெளியாட்களுக்கு உள்வாடகைக்கு கொடுத்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக ரேஸ்கோர்ஸ், கவுண்டம்பாளையம், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், மோசமான நிலையில் இருந்த, 1,642 வீடுகள் இடிக்கப்பட்டன.ரேஸ்கோர்ஸ் தாமஸ் பூங்கா, டி.எப்.ஓ., காம்பவுண்ட் பகுதியில் இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
டி.ஆர்.ஓ., காம்பவுண்ட் பகுதியில் மட்டும், 'ஏ', 'பி', 'சி', 'டி' ஆகிய பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசித்த அரசு ஊழியர்களில் சிலர், வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்ற பின்னரும், வீடுகளை காலி செய்து ஒப்படைக்காமல் உள்ளனர்.அவர்களில் சிலர், வட மாநிலத்தவர்களை உள்வாடகைக்கு அமர்த்தி, தலைக்கு இவ்வளவு என, மாதந்தோறும் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதேநேரம், தகுதியான அரசு ஊழியர்கள் பலரும் வீடு ஒதுக்கீடு பெற முடியாமல், தவிக்கின்றனர்.
இத்தகவல், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இருந்தபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், இதுதொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீடு கேட்டு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.'பட்டியல் தயாராகிறது'வீட்டு வசதி வாரிய (கோவை) செயற்பொறியாளர் கரிகாலன் கூறுகையில், ''ரேஸ்கோர்சில் வீடு காலி செய்யாதோர் பட்டியல் எடுத்து வருகிறோம். வெளியாட்களை வாடகைக்கு வைப்பது போன்ற புகார்கள், இதுவரை என்னிடம் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U