👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இடஒதுக்கீடு பெறுவதற்கான தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், இ.எஸ்.ஐ., சார்பில், ஒன்பது, எம்.பி.பி.எஸ்., மற்றும் ஒரு பல் மருத்துவக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவக் கல்லுாரிகளில், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கோவையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரியில், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 20 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த இடங்களில் சேர, தொழிலாளரின் மகன் அல்லது மகன் என்ற சான்றிதழ் சமர்ப்பிப்பதுஅவசியம். இச்சான்றிதழை பெற தகுதியான மாணவர்கள் விண்ணிப்பிக்க, இ.எஸ்.ஐ., கழகம் அழைப்பு விடுத்துள்ளது.இ.எஸ்.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
இதைப்பெற அவர்கள் தொழிலாளர்களின் குழந்தைகள் என்பதற்கான சான்றிதழ் பெறுவது அவசியம். இச்சான்றிதழ் பெற,
https://www.esichospitals.gov.in/admissionportal அல்லது
www.esic.nic.in என்ற, இணையதளங்களில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதியை அந்தந்த, இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன் பின் இணையதளம் மூலம் சான்றிதழைபெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்ய இம்மாதம், 28ம் தேதி இறுதி நாள். பூர்த்தி செய்தவிண்ணப்பம் சமர்ப்பிக்க, 29ம் தேதி இறுதி நாள்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U