👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 'வென்டிலேட்டர்' களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில், 7ம் தேதி, மின்தடை ஏற்பட்டு, வென்டி லேட்டர் செயலிழந்து, ஐந்து நோயாளிகள்உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.குற்றச்சாட்டை, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. சம்பவம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சுகாதாரத் துறை செயலர், பியூலா ராஜேஷ்உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், வென்டிலேட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை ஆய்வு செய்து, தயார்படுத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின்ஜோ கூறியதாவது :அனைத்து மருத்துவமனைகளிலும், அவசர சிகிச்சை பிரிவில், யு.பி.எஸ்., வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம், 'பேக் - அப்' இருக்கும் வகையில், யு.பி.எஸ்., பொருத்த அறிவுறுத்தப்பட்டது.அனைத்து மருத்துவமனைகளிலும், வென்டிலேட்டர், ஜெனரேட்டர்கள் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்னை இருப்பின், உடனடியாக சரி செய்ய, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U