தொழில் முறை வல்லுனர் பதிவுக்கான கல்வித் தகுதியில் கெடுபிடி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

தொழில் முறை வல்லுனர் பதிவுக்கான கல்வித் தகுதியில் கெடுபிடி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பொது கட்டட விதிகளின் படி, தொழில் முறை வல்லுனர்கள் பதிவுக்கான கல்வித் தகுதியில், அதிகாரிகள் வேண்டுமென்றே கெடுபிடி காட்டுவதாக, நகரமைப்பு வல்லுனர்கள் புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில், பொது கட்டட விதிகள், பிப்., 4ல் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்தாலும், இதை அமல்படுத்தும் பொறுப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையிடம் வந்துள்ளது.புதிய கட்டட விதிகளின்படி, விண்ணப்பங்களை பெறுவது, புதிய விதிகளை ஆன்லைன் திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன், பொது கட்டட விதிகளில் குறிப்பிட்டபடி, தொழில் முறை வல்லுனர்கள் பதிவுக்கான நடவடிக்கையும் துவங்கியுள்ளது.இதன்படி, சிவில் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கட்டுமான மேம்பாட்டாளர்கள், கட்டட அமைப்பியல் வல்லுனர்கள், நகரமைப்பு வல்லுனர்கள் என, 12 வகையான பிரிவுகளில், பதிவு மேற்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சிகளில் பதிவு செய்து, உரிமம் பெற்ற பலருக்கு, வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது :
பி.இ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களை மட்டுமே, அவரவர் பிரிவு வாரியாக தொழில் முறை வல்லுனராக பதிவு செய்ய, அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். டிப்ளமா, ஐ.டி.ஐ., படித்தவர்களை பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால், பல ஆண்டுகளாக கட்டுமான துறையில், தொழில் முறை ரீதியாக செயல்படுவோர் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், தொழில் முறை வல்லுனர்களின் கல்வித் தகுதி விஷயத்தில், அதிகாரிகளின் கெடுபிடி, அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. நடைமுறை சூழலுக்கு ஏற்ப விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில் முறை வல்லுனர்கள் பதிவில், ஐ.டி.ஐ., படித்தவர்களை அனுமதிப்பது குறித்து, அதிகாரிகள் நிலையில் ஆலோசித்து வருகிறோம். விரைவில், இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews