டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் சேருவதால், டெல்லி மாணவர்களுக்கு பாதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் சேருவதால், டெல்லி மாணவர்களுக்கு பாதிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அம்மாநில முதல்ச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இதற்கு டெல்லி பல்கலையில் படிக்கும் தமிழ் மாணவர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி பேச கூடாது. நாங்கள் யாருடைய வாய்ப்பையும் பார்க்கவில்லை. நாங்கள் திறமையை வைத்து மதிப்பெண் மூலம் மேலே வந்து இருக்கிறோம் என்றனர்.
டெல்லி பல்கலை.யில் அதிகம் படிப்பது, உத்தர பிரதேச மற்றும் பஞ்சாப் மாநில மக்கள்தான் என்றும், ஆனால் அவர்களை விட்டுவிட்டு எங்களை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். எங்களை இப்படி பிரித்து தனியாக நிற்க வைப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தை பற்றி மட்டும் இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்று சங்கத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழக மணவர்களின் கூட்டமைப்பு சார்பில், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் அர்விந்த் கெஜ்ரிவாலின் பேச்சு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக மாணவர்கள் சுமார் 500 பேர் ஆண்டுதோறும் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதால், டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews