👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கோவை, குமரி அரசு மருத்துவ கல்லூரியில் அடுத்த கல்வியாண்டில் நூறு சீட்கள் அதிகரிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இளங்கலையில் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகள் வழங்கப்படுகிறது. சுமார், 3 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கரூரில் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி கிடைத்துள்ளது. மேலும், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறியதாவது: அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, கல்லூரிகளுக்கு தேவையான வசதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த கல்வியாண்டில் கோவை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா நூறு கூடுதல் மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U