👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் ஆறாம் தேதி தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நடப்பாண்டு முதல் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. ஜூன் 5ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு மறுநாள் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.
www.tn.health.org,
www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் வழக்கம் போல் 100 இடங்கள் உள்ளது.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்கள் உள்ளன. ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் ஜூன் 6 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரசானை வெளியான பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் எடவின் ஜோ கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U